Translate

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

Delegation in Business






மஹாபாரதத்தில் கிருஷ்ணரிடம் சஞ்சயன் கேட்டார், கிருஷ்ணா சூதாட்டத்தை நீங்கள் நினைத்திருந்தால் பாண்டவர்களை காப்பாற்றி இருக்கலாமே? ஏன் இப்படி கைவிட்டு விட்டீர்கள் ?

துரியோதனன் புத்திசாலி அதனால் தான், தான் ஆடாமல் சகுனியை வைத்து ஆடினான், அதே போல் தருமனும் என்னை வைத்து ஆடி இருந்தால் இப்படி நாட்டையும் தன்னையும் இழக்க தேவை இல்லை இல்லையா ? என்றார் கிருஷ்ணர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒப்படைத்தல் என்ற டேலிகேசன் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மஹாபாரதத்தில் நமக்காக சொல்லி இருக்கிறார்கள்.

ஒப்படைத்தல் டெலிகேசன் என்பது என்ன?
நமக்கான செயல்களை செய்ய நமக்கு மாற்றாக நம்பிக்கைக்குரிய நபரை தேர்வு செய்து அவருக்கான கடமைகளை நாம் வழங்கினால் அதுவே டெலிகேசன்! செயல்களை விட சிந்தைகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவோர், கோடி கோடியாக கொடுத்தாலும் தலைவர்களின் சிந்தனைகளை சாமானிய மக்களிடம் இருந்து பெற்றுவிட முடியாது. ஆனால் இவர்களது சிறந்த சிந்தனைகளை செயல்படுத்த சாமானியர்களை பயன்படுத்துவதோடு அவர்களை முன்னேற்ற முடியும். அப்படிபட்ட முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களுக்கு ஒப்படைத்தல் என்ற டெலிகேசன் தேவை.

யாருக்கெல்லாம் ஒப்படைத்தல் என்ற டெலிகேசன் தேவை?
மனிதரின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தீர்மானிப்பது அவர்களுடைய ஆக்கபூர்வமான செயல்கள் தான். தங்களுடைய வாழ்வில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றக்கூடிய மாபெரும் இலக்குகளை கொடிருக்கக்கூடிய மனிதர்கள் அவர்களது ஆக்கபூர்வமான சிந்தனைகளை செயல்படுத்த போதிய நேரம் இல்லாததால் அவர்களது சிந்தனைகளை செயல்களாக மாற்ற மனிதர்களின் நேரத்தை பெரும் வகையில் அவர்களை பணியில் அமர்த்தி தங்களுக்காக பயன்படுத்துவார்கள்..

மேலாண்மை இயக்குனர்கள்?
ஒரு நிறுவனம் அல்லது அமைப்புகளுக்கு அதனை சிறப்பாக நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்று நடத்துபவர்கள், சமூக பொறுப்பில் இருக்கும் மனிதர்கள், ஆட்சியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள், தலைமை நிர்வாகிகள், பொதுப் பணியில் இருக்கக் கூடியவர்கள், உற்பத்தி மற்றும் விற்பனையில் இருப்பவர்கள் என அனைவரும் தங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்த தங்களின் பணியை, தேவையை நிறைவு செய்ய மற்றவர்களை பயன்படுத்தலாம்.
இதில் ஒவ்வொரு மனிதரின் தேவை மற்றும் அவர்களது முக்கியத்தும் மற்றும் பொருளாதாரம் தான் இதனை தீர்மானிக்கிறது.

யாருக்கெல்லாம் ஒப்படைத்தல் என்ற டெலிகேசன் தேவை இல்லை?
இலக்குகள் மற்றும் நோக்கம் அற்றவர்கள், மனிதர்களை சரியான முறையில் பயன்படுத்த தெரியாதவர்கள், நேரத்தின் முக்கியத்துவம் தெரியாதவர்கள், பணம் மற்றும் உழைப்பின் அருமை புரியாதவர்கள், தோலை நோக்கு பார்வை அற்றவர்கள், சமூக பார்வை இல்லாதவர்கள் என வளரச்சியின் யதார்த்தத்தை புரியாதவர்களுக்கு இது தேவையில்லை. அவர்களுக்கு கீழ் உள்ள மனிதர்கள் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி தடுமாறுவார்கள் மற்றும் சரியான வளரச்சியையும் அவர்களால் எட்ட முடியாது . ஒரு நாளின் முடிவில் ஓடி ஓடி உழைத்திருப்பார்கள் ஆனால் அதற்கான பயன்களை பெற்றிருக்க மாட்டார்கள்.
நமக்கான ஒப்படைக்கக்கூடியவர்கள், டேலிகேட் செய்யும் மக்கள் எப்படி வேண்டும். ?*
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல்
இரண்டு வரிகளில் வள்ளுவர் சொல்லிவிட்டார், நமக்கான செயல்களை நம்மை போல் செய்யாவிட்டாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வெற்றிகரமாக செய்தால் போதும் அவ்வளவுதான். அத்தகைய மனிதர்களை நாம் பணி அமர்த்தினாலே நமது நிறுவனம் சிறந்ந வளர்ச்சியை பெறும்.

சரி சரியான நபர்களை எப்படி கண்டறிவது ?
பொதுவாக சிறந்த பணியாளர்கள்/ பொறுப்பினை ஏற்க கூடியவர்களுக்கு நடிக்க தெரியாது. உள்ளதை உள்ளபடி பேசக்கூடியவர்கள் ஆக இருப்பார்கள், இதன் காரணமாகவே சரியான நபர்களை நாம் இழப்பது அதிகம். மேலும் நேர்மையானவர்களாகவும், கடமையை சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் சுற்றியிருப்பவர்கள் இவர்களை சரியாக பயன்படுத்தாமல் இருப்பார்கள்.

இவர்களை பாராட்டினால் போதும் இன்னும் அதிக வேகமாக செயல்படுவார்கள், பொறுப்பினை தட்டி கழிக்க மாட்டார்கள், அனைத்தையும் விட நேரத்தை சரியாக கடைபிடிப்பார்கள்.. உங்களால் உங்களது தேவைகளுக்கு ஏற்ப தங்களின் வேலைகளை சரியான மனிதர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கி வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டால் போதும் வளர்ச்சி அதிகமாகும்.

இதனால் என்ன பயன் கிடைக்கும் ?

எந்திரன் படத்தில் நமது சூப்பர் ஸ்டார் ஒரு சிட்டியை வடிவமைப்பார் அது போல ஒரு தலைசிறந்த கொள்கை மற்றும் நோக்கத்திற்கான பயணத்தை மேற்கொள்ளும் போது இடை இடையே தடைகளாக சாதாரண வேலைகளுக்கான தேவைகள் வரும். அதற்கு நாம் தான் நேரடியாக செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக நம் சார்பாக யார் வேண்டும் என்றாலும் அதை செய்யலாம்.

எடுத்து காட்டாக, 

பொருட்களை டெலிரி செய்வது,
தகவல்களை பதிவேற்றம் செய்வது
உற்பத்தியை சரிபார்ப்பது, போன்றவைகள்
இவைகளை சரியாக முறைப்படுத்தி ஒருவருக்கு வழங்கி விட்டால் அவரே இதனை சரியாக கையாண்டு விடுவார் எனில் அதன் பிறகு நாம் அதை விட முக்கியமான வேலைகளை தொடரலாம்.

நமக்கான 24 மணிநேரத்தில் 8 மணி நேரம் உடலுக்காக செலவிடுகிறோம். மீதம் உள்ள 16 மணி நேரம்தான் நம்மால் உழைக்க முடியும் அதில் எத்தனை வேலைகளை நாமே செய்யமுடியும் ? இதனை நிவர்த்தி செய்து வெற்றிகரமான நிறுவனத்தை செயல்படுத்த டெலிகேசன் மிகவும் முக்கியம்.

Contact: 9940600860
For more info: www.myelite.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக